மீண்டும் ஒரு கருப்பு ஜூலை! நாடாளுமன்றத்தில் எச்சரித்த அர்ச்சுனா
இலங்கையில் மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை போன்றதொரு அவல நிலை ஏற்படுவதற்கு வழிவகுக்க முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா(Ramanathan Archchuna) தெரிவித்துள்ளார்.
இன்று(17) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“தையிட்டி விகாரையை உடைப்பது வெறுமனே பிரச்சினைகளை உண்டாக்கும் என்பதோடு பழிவாங்கல் நடவடிக்கைகள் முன்னெடுக்க வாய்ப்புள்ளது.
இரணைமடுவில் புதிதாக விகாரைகள் கட்டப்படவுள்ளதாக அறியமுடிகின்றது.
விகாரைகளை இனிமேலும் பொது மக்களுடைய காணிகளில் அமைக்கும் நடவடிக்கையை முன்னெடுக்ககூடாது” என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், ஹரினி அமரசூரிய அண்மையில் வடக்கிலுள்ள ஒரு பாடசாலையொன்றுக்கு விஜயம் மேற்கொண்டதை தெரிவித்து அவர் ஏற்கனவே பாடசாலைகளை அரசியல்மயப்படுத்த வேண்டாம் என்று தெரிவித்திருந்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பான விரிவான விளக்கங்களை கீழுள்ள காணொளியில் காணலாம்....
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
மீண்டும் பிளாக்பஸ்டர் இயக்குநருடன் இணையும் அஜித்.. இதற்காகதான் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் Cineulagam
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri