கிண்ணியாவில் விபத்து: இளைஞன் படுகாயம்
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கச்சகொடித்தீவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.
குறித்த விபத்தானது இன்றையதினம்(21.1.2026) இடம்பெற்றுள்ளது.
முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 21 வயதுடைய இளைஞன் ஒருவரே காலில் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

காயமடைந்த இளைஞன் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக கிண்ணியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தலைமறைவாகியுள்ள சாரதி
விபத்து இடம்பெற்றவுடன் முச்சக்கர வண்டியின் சாரதி அவ்விடத்திலிருந்து தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துக்குள்ளான வாகனங்கள் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளதுடன், தலைமறைவாகியுள்ள சாரதியை கைது செய்ய கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
பாரிஸ் அவசரக் கூட்டத்தில் பங்கேற்க மறுத்த ட்ரம்ப் - கிரீன்லாந்து விவகாரம் மீதான சர்ச்சை தீவிரம் News Lankasri