மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று கொண்டுவரப்படவுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக இருக்கும் நீதியரசர் பந்துல கருணாரத்ன, குறித்த பதவிக்குப் பொருத்தமற்றவர் என்றொரு பிரச்சினை எழுந்துள்ளது.
முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஶ்ரீலங்கா கிரிக்கட் சபையின் நிர்வாகத்தைக் கலைத்து , இடைக்கால நிர்வாகமொன்றை நியமித்தமை தொடர்பான வழக்கில் நீதியரசர் பந்துல கருணாரத்னவின் செயற்பாடு விமர்சனத்துக்கு உட்பட்டிருந்தது.
இடைக்காலத் தடை உத்தரவு
குறித்த இடைக்கால நிர்வாக சபைக்கு எதிராக ஷம்மி சில்வா முன்வைத்த கோரிக்கையை ஏற்று பந்துல கருணாரத்ன உடனடியாக இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்திருந்தார்.

மேலும் குறித்த வழக்கில் தனக்கு விருப்பமான முறையில் நீதியரசர்களை நியமனம் செய்திருந்தார் என்றும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
அதன் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதமளவில் நீதியரசர் பந்துல கருணாரத்னவை உச்சநீதிமன்ற நீதியரசராக நியமனம் செய்ய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பரிந்துரைத்த போது, மேற்குறித்த வழக்கை காரணம் காட்டி அவரது நியமனத்தை அரசியலமைப்பு பேரவை நிராகரித்திருந்தது.
நம்பிக்கையில்லாப் பிரேரணை
இவ்வாறான நிலையில் நீதியரசர் பந்துல கருணாரத்னவை கௌரவமான முறையில் தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு அரசாங்கத்தினால் அறிவுறுத்தப்பட்டிருந்தது.எனினும் அவர் அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைக்க அரசாங்கம் தயாராகி வருவதாக அறியக் கிடைத்துள்ளது.
குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான மனுவில் 118 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri