வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பிய தாய் - மகளுக்கு நேர்ந்த பரிதாபம்
மாத்தறையில் கடலில் நீராடும் போது உயிரிழந்த மாணவியின் சடலம் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
அம்பேகம பிரதேசத்தில் வாடகை வீடு ஒன்றில் தனது பாட்டியுடன் வாழ்ந்து வந்த இமல்ஷா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வெலிகம, முதுகொட்டுவ கடலில் நீராடும் போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
அவரது உறவுக்கார பெண் ஒருவரின் திருமணத்திற்கு சென்ற போதே அவர் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
உயிரிழந்த மாணவியின் தாய் அண்மையிலேயே வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியுள்ளார் என தெரியவந்துள்ளது.
வாடகை வீட்டில் மிகவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இந்த குடும்பத்தினர் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த வருடம் உயர்தர பரீட்சைக்கு தயாரிய கொண்டிருந்த மாணவி, இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இந்த மாணவியின் திடீர் மரணத்தால் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாவும் மிகவும் திறமையான ஒரு மாணவியை இழந்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
யார் இந்த கிரிஜா? பிரபல நடிகருடன் நெருக்கமான காட்சிகள், திடீர் ட்ரெண்டிங், முழு விவரம்... Cineulagam
குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ் நாள் முழுவதும் ஏற்க தயார்... மாதம்பட்டி ரங்கராஜ் கொடுத்த ஷாக் Manithan
பிரித்தானியாவின் மில்லியனர் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி - வெளிநாடுகளில் குடியேறும் செல்வந்தர்கள் News Lankasri
டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri