யாத்திரையில் மகளை தேடிய தாய் பரிதாபமாக உயிரிழப்பு
சிவனொளிபாதமலை யாத்திரை மேற்கொண்டிருந்த பெண் ஒருவர் வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
அக்குரெஸ்ஸ, பிரதேசத்தை சேர்ந்த 43 வயதான சுனிதா குமாரி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண் 2 பிள்ளைகளின் தாய் ஆவார். குறித்த பெண் தனது சொந்த ஊரான ஊருபோக்காவை சேர்ந்த உறவினர்கள் குழுவுடன் ஒரு யாத்திரையை ஏற்பாடு செய்து, இந்த மூன்று நாள் யாத்திரையில் இணைந்துள்ளார்.
தாய் பரிதாபமாக உயிரிழப்பு
பயணத்தின் இரண்டாவது நாளான மே மாதம் 4 ஆம் திகதி, நல்லதன்னி பகுதியில் உள்ள ஓடையில் வழுக்கி விழுந்து சுனிதா உயிரிழந்துள்ளார்.
திடீரென தனது மகளை காணவில்லை என தேடிய சுனிதா தனது கணவரிடம் மயக்கம் ஏற்படுவதாக கூறியதாகவும் மகளை தேடி பார்க்குமாறும் கூறியுள்ளார்.
கணவர் மகளை தேடி சென்ற போது சுனிதா வழுக்கி விழுந்துள்ளார். காயமடைந்த பெண்ணை பொலிஸார் மஸ்கெலிய பிராந்திய மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் சிக்கிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

இந்தியாவின் கட்டுப்படியாகாத நகரம் எது தெரியுமா? பணக்காரர்களுக்கு கூட வீடு வாங்க 109 ஆண்டுகள் ஆகுமாம் News Lankasri

Numerology : இந்த தேதியில் பிறந்த பெண்ணை திருமணம் செய்தால் ராஜயோகம் உறுதி... நீங்க பிறந்த தேதி? Manithan

Record Breaking வியாபாரம் ஆனது ரஜினியின் கூலி படம்... யார் எத்தனை கோடிக்கு வாங்கியுள்ளார்கள் தெரியுமா? Cineulagam
