இலங்கையில் இறப்புக்கள் அதிகம் இடம்பெற அரசாங்கத்தின் செயற்பாடே காரணம்: து.ரவிகரன்

Jaffna Sri Lanka
By Shan Apr 28, 2024 09:13 PM GMT
Report

இலங்கை அரசாங்கத்தின் (sri lanka government) செயற்பாட்டின் காரணமாகவே தற்போதைய இறப்பு வீதம் அதிகரித்துள்ளதாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் (T. Raviharan) தெரிவித்துள்ளார்.

கரியல்வயல் - சுண்டிக்குளம் பகுதிகளை அண்மித்துள்ள சுமார் 130 நபர்களுக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை தொடர்பில் நேற்றையதினம் (28.04.2024) களவிஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் இருந்து மீண்டும் பெரிய வெங்காயம் இறக்குமதிக்கு நடவடிக்கை

பாகிஸ்தானில் இருந்து மீண்டும் பெரிய வெங்காயம் இறக்குமதிக்கு நடவடிக்கை

விவசாய நடவடிக்கை

அவர் மேலும் தெரிவித்ததாவது,

“கரியல்வயல் பகுதியில் தொடர்ச்சியாக நான்கு - ஐந்து தலைமுறையாக விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மக்களில் சுமார் 130 நபர்களுக்கு எதிராக கடந்த வருடம் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் பறவைகள் சரணாலயம் பகுதிக்குள் இருப்பதாக கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நிலப்பரப்பில் விவசாய நடவடிக்கை நிறைவடைந்ததையடுத்து சிறுதானிய பயிர்ச்செய்கையை மேற்கொள்வார்கள்.

கடந்த 1901 ஆம் ஆண்டு நில அளவை திணைக்களத்தினால் வழங்கப்பட்ட வரைபடம் மற்றும் 1908 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட உறுதிகளும் இவர்களிடம் இருக்கின்றன.

இலங்கையில் இறப்புக்கள் அதிகம் இடம்பெற அரசாங்கத்தின் செயற்பாடே காரணம்: து.ரவிகரன் | Most Of The Deaths Caused By Sri Lanka Government

தற்போது இலங்கை அரசாங்கமானது அட்டூளியமான ஆட்சி நடவடிக்கை முலம் மக்களுடைய காணிகளை பறித்து தங்களுடைய திணைக்களங்களான வன ஜீவராசிகள், வன இலாகா, தொல்லியல், இல்மனைற் மற்றும் மகாவலி எல் போன்ற  திணைக்களங்களின் ஊடாகவும் இராணுவம், கடற்படை , விமானப்படை, சிவில் பாதுகாப்பு படை, பொலிஸார் போன்ற படையினர் ஊடாகவும் மக்களை விவசாயம் செய்ய முடியாதளவிற்கு நிற்கதியாக்கி பட்டினி போடுமளவிற்கு தள்ளியுள்ளது.

மக்களை பாதுகாக்க வேண்டியதே அரசாங்கம். மக்களை துன்புறுத்தி கொண்டு இருப்பதனால் மக்கள் இலங்கையில் இருக்க முடியாமல் வெளிநாடுகளுக்கு ஓடுகிறார்கள். 

இலங்கையில் இறப்புக்கள் அதிகம் இடம்பெற அரசாங்கத்தின் செயற்பாடே காரணம்: து.ரவிகரன் | Most Of The Deaths Caused By Sri Lanka Government

அரசாங்கத்தின் நடவடிக்கையாலே முதல் இருந்ததை விட தற்போது இறப்புக்கள் அதிகரித்துள்ளது.

தமிழர்களை எவ்வாறாவது நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்ற சிந்தனையுடனே ஆட்சியாளர்கள் ஆட்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழர்கள் நாட்டின் பிரஜைகள் ஆதிகால பூர்வீக குடிமக்கள் தமிழர்களே. இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்வதனால் உங்களுடைய சந்ததிக்கே இழுக்காக அமையும்” என மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பிறப்பு வீதத்தில் வீழ்ச்சி : எச்சரிக்கும் பதிவாளர் திணைக்களம்

இலங்கையில் பிறப்பு வீதத்தில் வீழ்ச்சி : எச்சரிக்கும் பதிவாளர் திணைக்களம்

தந்தை செல்வாவின் புகழைக் கொன்ற தமிழரசுக்கட்சி பிரமுகர்கள் : ஆனந்தசங்கரி ஆதங்கம்

தந்தை செல்வாவின் புகழைக் கொன்ற தமிழரசுக்கட்சி பிரமுகர்கள் : ஆனந்தசங்கரி ஆதங்கம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
கண்ணீர் அஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland

25 Mar, 2026
மரண அறிவித்தல்

இராசாவின் தோட்டம், Toronto, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மண்டைதீவு, Toronto, Canada

25 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
நன்றி நவிலல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், கோண்டாவில்

30 Mar, 2013
மரண அறிவித்தல்

வல்வெட்டி, ஆவரங்கால்

27 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, London, United Kingdom

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Allschwil, Switzerland

30 Mar, 2017
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், India, பிரான்ஸ், France

29 Mar, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், பிரான்ஸ், France, New Malden, United Kingdom

29 Mar, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், ஆனைக்கோட்டை, Grevenbroich, Germany

26 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கொழும்பு, Harrow, United Kingdom

28 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, சரவணை கிழக்கு, கந்தர்மடம்

09 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Basel, Switzerland

15 Mar, 2022
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, London, United Kingdom

24 Mar, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US