10 பேருக்கு கோவிட்! இரு வர்த்தக நிலையங்களுக்கு சீல் வைப்பு - செய்திகளின் தொகுப்பு
மட்டக்களப்பு நகர் பொதுச் சந்தை தொகுதியில் கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், இரு வர்த்தக நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தக நிலைய பகுதியில் 79 பேருக்கு அண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் 10 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு பொது சுகாதார வைத்திய அதிகாரி கே.கிரிசுதான் தலைமையில் பொது சுகாதார வைத்திய அலுவலக குழுவினரால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,