முழு அரசுக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணை! ரணில் விக்ரமசிங்க - செய்திகளின் தொகுப்பு
முழு அரசாங்கத்துக்கும் எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், சஜித் அணியால் சமர்ப்பிக்கப்படவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்குள் காணப்படும் கருத்து வேறுபாட்டை தீர்க்க அரசாங்கத்துக்கு உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,
நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருந்தால் யாருக்கு எதிராகவும் இந்நேரத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டு வந்திருக்கமாட்டேன்.
இது முட்டாள்தனமான தீர்மானமாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,