இந்தியப் பிரதமரின் வடபகுதி கரிசனை! பலாலியில் களமிறங்கவும் திட்டம்: செய்திகளின் தொகுப்பு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த மாதம் இலங்கையில் இடம்பெறும் பீம்ஸ்ரெக் உச்சி மாநாட்டில் பங்கேற்க பயணம் செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மோடி இந்தியாவில் இருந்து நேரடியாகவே விமானம் மூலம் பலாலிக்கு செல்ல திட்டமிடுவதான செய்திகள் வெளிவந்துள்ளன.
பீம்ஸ்ரெக் உச்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்தியப் பிரதமருக்கு அழைப்பு விடுத்திருந்தாலும், பிரதமர் மோடியின் இந்தப் பயணம் குறித்து இந்தியத்தரப்பு இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்புக்களை வெளியிடவில்லை.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,