பணம் அச்சிட்டதன் எதிரொலி! 4 ஆண்டுகளுக்கு பின் இலங்கைக்கு பாரிய நெருக்கடி - செய்திகளின் தொகுப்பு (VIDEO)
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) மூலம் அளவிடப்படும் நாடு தழுவிய பணவீக்கம் கடந்த செப்டெம்பர் மாதத்தில் 6.2 வீதமாக இருந்து ஒக்டோபர் மாதத்தில் 8.3 வீதமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
4 ஆண்டுகளுக்குப் பின்னர் நாட்டில் பதிவான அதிகபட்ச பணவீக்கமாக இது கருதப்படுகிறது.
குறைந்த வட்டி விகிதங்களை பேணுவதற்காக பணத்தை அச்சடித்ததன் பின்னர் நான்கு வருட உயர்வானது பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விரிவான செய்திகளுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,