காட்டுத்தீயை பரப்பிய 24 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!
கடந்த ஆண்டு சிரியாவில் உள்ள காட்டுப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ 3 மாகாணங்களுக்கு பரவிய நிலையில், பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட 187 காட்டுத்தீ சம்பவத்தில் 280 நகரங்கள் மற்றும் கிராமங்கள் என்பன பாதிக்கப்பட்டன.
இந்த காட்டுத்தீயினால் 32 ஆயிரம் ஏக்கர் காட்டில் உள்ள விவசாய நிலம் அழிந்திருந்ததுடன், மேலும் 370 வீடுகள் தீக்கிரையானதுடன், 3 பேர் உயிரிழந்திருந்தனர்.
இந்த நிலையில், இந்த காட்டுத்தீ திட்டமிட்டு நடத்தப்பட்டதென அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து காட்டுத்தீயை வேண்டுமென்றே பரப்பிய 24 பேரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில் 24 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த செய்தி தொடர்பான மேலும் பல உலக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இப்படிக்கு உலகம் விசேட தொகுப்பு,
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 17 மணி நேரம் முன்
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri