காட்டுத்தீயை பரப்பிய 24 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!
கடந்த ஆண்டு சிரியாவில் உள்ள காட்டுப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ 3 மாகாணங்களுக்கு பரவிய நிலையில், பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட 187 காட்டுத்தீ சம்பவத்தில் 280 நகரங்கள் மற்றும் கிராமங்கள் என்பன பாதிக்கப்பட்டன.
இந்த காட்டுத்தீயினால் 32 ஆயிரம் ஏக்கர் காட்டில் உள்ள விவசாய நிலம் அழிந்திருந்ததுடன், மேலும் 370 வீடுகள் தீக்கிரையானதுடன், 3 பேர் உயிரிழந்திருந்தனர்.
இந்த நிலையில், இந்த காட்டுத்தீ திட்டமிட்டு நடத்தப்பட்டதென அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து காட்டுத்தீயை வேண்டுமென்றே பரப்பிய 24 பேரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில் 24 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த செய்தி தொடர்பான மேலும் பல உலக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இப்படிக்கு உலகம் விசேட தொகுப்பு,





சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
