வவுனிக்குளம் போக்குவரத்து சேவைகள் இடம்பெறாமையினால் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு
முல்லைத்தீவு - அம்பாள்புரம்,வவுனிக்குளம் வீதியூடாக போக்குவரத்துச் சேவைகள் இடம்பெறாமையினால் அந்த பகுதியில் உள்ள சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள பாலிநகர் சந்தியிலிருந்து கொல்லவிளாங்குளம் அம்பாள்புரம் ஆறாம்கட்டை ஆகிய கிராமங்களுடாக வன்னிவிளாங்குளம் சந்தி வரைச் செல்லும் பிரதான வீதியானது கடந்த பல ஆண்டுகளாக புனரமைக்கப்படாத நிலையில் காணப்பட்டமையால் இதனூடாக மேற்கொள்ளப்பட்டு வந்த பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டன.
இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் தமது அன்றாட அடிப்படைத் தேவைகளை பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
குறிப்பாக இப்பகுதியில் உள்ள பாடசாலை தரம் 5 வரையான வகுப்புக்களை கொண்டு இயங்குவதனால் உயர்தர வகுப்புக்களில் கல்வி கற்கும் மாணவர்கள் ஐந்து அல்லது 10 கிலோமீற்றர் தொலைவில் உள்ள வன்னிவிளாங்குளம், மாங்குளம், மல்லாவி ஆகிய பாடசாலைகளுக்கே செல்ல வேண்டியுள்ளது.
எனவே,மல்லாவியிலிருந்து மாங்குளம் ஊடாக செல்லும் பேருந்து சேவையின் குறிப்பிட்ட சேவைகளையும், மாங்குளத்திலிருந்து மல்லாவி செல்லும் பேருந்து சேவையின் குறிப்பிட்ட சேவைகளையும் இவ்வீதியூடாக மேற்கொள்ளுமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, இதனூடான பேருந்து சேவையினை மேற்கொள்ளுமாறு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் ஆகியோருக்கு மகஜர்களை வழங்கி வைத்த போதும் இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் இல்லை என இப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri