ஈராக் போராட்டத்தில்15 பேர் பலி: நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு

Iraq Iraqi Protests
By Jenitha Aug 30, 2022 06:56 AM GMT
Report

ஈராக் அரசியலில் ஷியா தலைவர் முக்தாதா அல்-சதர் ஆதரவாளர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

முக்தாதா அல்-சதர், தான் அரசியலில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார். இதனால் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தின் போது சதரின் 15 ஆதரவாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், சுமார் 350 எதிர்ப்பாளர்கள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு

ஈராக் போராட்டத்தில்15 பேர் பலி: நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு | Moqtada Al Sadr Fighting In Iraqi Capital

ஈராக்கின் காபந்து பிரதமர் அமைதிக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் பல நகரங்களில் அமைதியின்மை ஏற்பட்டதை அடுத்து இராணுவம் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவையும் அறிவித்துள்ளது.

சமீப ஆண்டுகளில் ஈராக் தலைநகரைத் தாக்கிய மிக மோசமான வன்முறையாக இது பார்க்கப்படுகின்றது.

பெரும்பாலான சண்டைகள் நகரின் பசுமை மண்டலத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பதிவாகியுள்ளது.

முக்தாதா அல்-சதர்

ஈராக் போராட்டத்தில்15 பேர் பலி: நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு | Moqtada Al Sadr Fighting In Iraqi Capital

ஈராக் அரசியலில் ஷியா தலைவர் முக்தாதா அல்-சதர் அமெரிக்க-எதிர்ப்பு போராளிகளை வழிநடத்தியவர் மற்றும் லட்சக்கணக்கான ஆதரவாளர்களைக் கொண்ட செல்வாக்குமிக்க தலைவராக திகழ்கிறார்.

கடந்த ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற தேர்தலில் அவரது கட்சி 73 இடங்களை வென்ற நிலையில், அல்-சதர் மற்றும் அவரது போட்டியாளர்களுக்கு இடையிலான முட்டுக்கட்டையால் தேர்தல் முடிந்து பல மாதங்கள் கடந்தும் கூட, ஈராக்கில் ஒரு சாதனையாக இன்னும் அரசாங்கம் இல்லாத நிலை உள்ளது.

ஈராக் நாடாளுமன்றத்தை கலைத்தல், முன்கூட்டியே தேர்தல் நடத்துவது உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடுமாறு தனது ஆதரவாளர்களை அல்-சதர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையே, முக்தாதா அல்-சதர், தான் அரசியலில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்திருந்த நிலையில் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும்,

போராட்டக்காரர்களின் வன்முறை மற்றும் ஆயுத பயன்பாடு நிறுத்தப்பட வேண்டும் எனக்கூறி அல் சதர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.      

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US