மட்டக்களப்பில் மீண்டும் பதிவாகும் பலத்த மழைவீழ்ச்சி
மட்டக்களப்பு மாவட்டத்தில் வடகீழ் பருவப்பெயர்ச்சி மழை வீழ்ச்சி மீண்டும் பொழியத்துவங்கியுள்ளது.
கடந்த வருடம் இறுதி வரையில் பெய்து வந்த மழை கடந்தவாரம் சற்று ஓய்ந்திருந்த நிலையில் நேற்று (06.01.2026) அதிகாலை முதல் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகி வருகிறது.
மழைவீழ்ச்சி பதிவு
இந்நிலையில் மட்டக்களப்பு நகரில் 39.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், நவகிரிப்பகுதியில் 55 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், தும்பங்கேணிப் பகுதியில் 36 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், உன்னிச்சைப்பகுதியில் 33 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், உறுகாமம் பகுதியில் 26 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், மைலம்பாவெளி பகுதியில் 31 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், வாகரை பகுதியில் 38 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், கல்முனை பகுதியில் 19.5 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும் செவ்வாய்கிழமை காலை 8.30 மணிவரையில் கடந்த 24 மணித்தியாலங்களில் பதிவாகியுள்ளது.
கடந்த 2025 முழுவதும் 1863.4 மழைவீழ்ச்சி கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், மட்டக்களப்பு வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
குளங்களின் நீர்மட்டம் உயர்வு
இந்நிலையில் மட்டக்களப்பில் அமைந்துள் மிகப்பிரதான குளங்களின் நீர்மட்டங்களும் வெகுவாக உயர்ந்துள்ளன.
இந்த நிலையில் களுவாஞ்சிகுடி, வெல்லாவெளி, பட்டிப்பளை, வவுணதீவு உள்ளிட்ட பல பிரதேசங்களிலுள்ள கிராமியக் குளங்கள் முற்றாக நிரம்பியுள்ளன.
இதேவேளை முறையான வடிகான் வசதியின்மையால் கிராமங்களிலுள்ள உள்வீதிகள் மற்றும் குடியிருப்புக்களிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளதனால் மக்களும் பெரும் சிரமங்களை எதிர் கொண்டு வருவதையும் காணமுடிகின்றது.






சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri