துறவிகள் துறவிகளுக்கான வேலைகளை செய்ய வேண்டும்-ஜனாதிபதி
அரசாங்கம் பல்கலைக்கழக மாணவர்கள் எவரையும் கைது செய்யவில்லை எனவும் வசந்த முதலிகே 8 முதல் 9 ஆமண்டுகள் பல்கலைக்கழகத்தில் இருப்பதாகவும் அது எப்படி எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
வசந்த முதலிகே பல்கலைக்கழக மாணவர் அல்ல

வசந்த முதலிகே பல்கலைக்கழக மாணவர் அல்ல. பல்லைக்கழக மாணவர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. வசந்த முதலிகே 8 முதல் 9 ஆண்டுகள் பல்கலைக்கழகத்தில் இருக்கின்றார்.
வசந்த முதலிகேவுக்கு 31 வயது.எப்படி இது முடியும். இதற்கு இடமளிக்க முடியாது. தேவையெனில் ஒரு வருடம் வழங்கலாம். அதன் பின்னர் பல்கலைக்கழகத்தில் இருந்து விலக வேண்டும்.நான் பல்கலைக்கழத்தில் இருந்து வெளியேறும் போது 21 வயது.
அரசியலமைப்புச்சட்டத்தின் மூன்றாது சரத்தில் மக்களின் இறையாண்மை உரிமைகள் பற்றி கூறப்பட்டுள்ளது. அதனை நடைமுறைப்படுத்தும் நான்கு வழிகள் உள்ளன. நாடாளுமன்ற, நிறைவேற்று அதிகாரம் மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நீதிமன்ற அதிகாரம்.
இப்படியே அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அடுத்தது அடிப்படை உரிமை. சர்வஜன வாக்கெடுப்பில் மாத்திரமே நேரடியாக மக்கள் பங்கு பெறலாம். எவரும் வீதியில் இறங்கி ஆட்டம் போட முடியாது.
வன்முறைகளில் ஈடுபட இடமில்லை. அரசியலமைப்புச்சட்டத்தை பாதுகாக்கவே இராணுவம் இருக்கின்றது. நாட்டின் அரசாங்கத்தை கவிழ்க்க வரும் போது இராணுவம் ஒதுங்கி இருந்து வேடிக்கை பார்க்க முடியாது.
காவி அணிந்த துறவிகளை பயன்படுத்தி மேற்கொள்ளும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்

வீதிகளில் இறங்கி எமது விகாரைகளுக்கு காவி அணிந்த சிறார்களை அனுப்பி பௌத்த பிக்குமாரை அச்சுறுத்தும் போது நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். காவி அணிந்த துறவிகளை சம்பந்தப்படுத்தி மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும்.
அரசியலமைப்புச் சட்டத்தின் 9வது சரத்திற்கு அமைய அவற்றை நிறுத்துவது இராணுவத்தின் கடமை. காவி அணிந்த துறவிகள் அதற்கான வேலைகளை செய்துக்கொண்டு இருக்க வேண்டும். அதனை விடுத்து வேறு வேலைகளை செய்ய நான் இடமளிக்க மாட்டேன் எனவும் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
சுந்தரவள்ளிக்கு தெரியவந்த ரஞ்சித் பற்றிய உண்மை... மூன்று முடிச்சு பரபரப்பான சீரியல் புரொமோ Cineulagam