அநுர அரசாங்கத்தின் பெரும் எதிரியாக மாறியுள்ள குரங்குகள்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திற்கு சமீபகாலமாக நாட்டில் உள்ள குரங்குகள் பெரும் எதிரியாக மாறியுள்ளன.
நாட்டில் நேற்று ஏற்பட்ட மின்வெட்டுக்கு காரணமாக பாணந்துறை மின் இணைப்பு துணை மின்நிலையத்தில் குரங்கு ஒன்று குதித்தமை கூறப்பட்டிருந்தது.
மக்கள் விடுதலை முன்னணியின் முக்கியஸ்தராக உள்ள கே.டி. லால்காந்த, பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் குரங்குகளை என்ன செய்யலாம் என அமெரிக்கத் தூதுவருடன் விவாதித்தாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
குரங்குகளை ஆண் வேறாகவும் பெண் வேறாகவும் பிரிப்பதற்கு திட்டமிடப்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.
இவற்றை வைத்துப் பார்க்கும் போது குரங்குகள் தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக்கு எதிரியாக மாறியுள்ளமை தெரியவருகின்றது.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)