மதுபோதையில் நடு வீதியில் மோசமாக நடந்து கொண்ட பிக்கு
மதுபானம் அருந்தி விட்டு நடு வீதியில் மோசமான முறையில் நடந்து கொண்டதாக கூறப்படும் பௌத்த பிக்கு ஒருவரை ஆனமடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த பௌத்த பிக்கு நேற்று நள்ளிரவு 12 மணியளவில் ஆனமடுவ பேருந்து நிலையத்திற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
தான் அநுராதபுரத்தில் முச்சக்கரவண்டியில் ஆனமடுவ பிரதேசத்திலற்கு வந்ததாக பிக்கு பொலிஸாரிடம் கூறியுள்ளதாக தெரியவருகிறது.
பிக்குவுடன் சிலர் வந்துள்ளதாகவும் அவர்கள் பற்றி தகவலை அவர் வழங்கவில்லை எனவும், அவ்வாறு வந்தவர்கள் பற்றிய எவ்வித தகவல்களும் இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆனமடுவ பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.