ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் இலங்கை மின்சார சபைக்கு திறைசேரியில் இருந்து ஒதுக்கப்படவுள்ள பணம்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SLA) மற்றும் இலங்கை மின்சார சபை (CEB) ஆகியவற்றுக்கு திறைசேரியில் இருந்து 238.9 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்படவுள்ளது.
இரண்டு நிறுவனங்களும் தமது கடன்களை தீர்த்து, மறுசீரமைப்பு திட்டத்துக்கு தயாராகும் வகையிலேயே இந்த ஒதுக்கம் மேற்கொள்ளப்படுகிறது.
நிதி அமைச்சு இந்த கூடுதல் நிதி மதிப்பீட்டை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒதுக்கப்படும் நிதி விபரம்
இதில் மின்சார சபைக்கு 129 பில்லியன் ஒதுக்கப்படுவதுடன், தேசிய விமான சேவைக்கு 109.9 பில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளது.
நிதி அமைச்சின் உயர் அதிகாரிகளுடனான நீண்ட கலந்துரையாடலின் பின், ஹர்ஷ டி சில்வா தலைமையிலான நாடாளுமன்ற பொதுக் கணக்குகளுக்கான குழு (COPA) இந்த கூடுதல் மதிப்பீட்டை அண்மையில் அங்கீகரித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
