குறைந்த வருமானம் கொண்ட இலங்கையர்களுக்கு நற்செய்தி
குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கான அஸ்வெசும நிவாரணத்திட்டத்தின் இரண்டாம் கட்ட நிவாரணத்திற்கான விண்ணப்பங்கள் கோரும் பணி எதிர்வரும் ஜனவரி மாதம்(2024) முதல் ஆரம்பிக்கப்படும் என சமூக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
முதலாம் கட்ட கொடுப்பனவுகள்
முதலாம் கட்டத்திற்கான அனைத்துக் கொடுப்பனவுகளையும் வழங்கும் பணி டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டெம்பர் மாதத்திற்கான கொடுப்பனவும் இம்மாதம் 15ஆம் திகதிக்குள்ளும், அக்டோபர் மாதத்திற்கான கொடுப்பனவும் நவம்பர் இறுதியிலும் வழங்கப்படவுள்ளது.
இந்தநிலையில், அஸ்வெசும நிவாரணத் திட்டத்திற்கான விசேட வாரம் நாளை(06) ஆரம்பிக்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் உறுப்பினர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார். எதிர்வரும் 11ஆம் திகதி வரை இது நடைமுறையில் இருக்கும்.
இந்த வாரத்தில் நிவாரணத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் மற்றும் ஏற்கனவே உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் ஆகியவை செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை தோல்வியையே சந்திக்காத கேப்டன்! எதிர்கொள்ளப்போகும் அவுஸ்திரேலியா..எதிர்பார்ப்பில் WTC இறுதிப்போட்டி News Lankasri

மீண்டும் ஒளிபரப்பாக போகிறது சன் டிவி-ல் ரசிகர்கள் கொண்டாடிய ஹிட் சீரியல்.. எந்த தொடர் தெரியுமா? Cineulagam

நிபந்தனையுடன் சண்டை நிறுத்த பேச்சுவார்த்தை: ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்..லண்டனில் தெரிவித்த அதிகாரிகள் News Lankasri

பாகிஸ்தானுக்கு அடுத்த நெருக்கடி... இந்த நாட்டின் முடிவால் இந்தியாவுடன் கைகோர்க்கும் சீனா News Lankasri
