வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் பணம் திருட்டு
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பணம் களவாடப்பட்டுள்ளது.
நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
குறித்த வைத்தியசாலையில் பணிசெய்யும் தாதியர் ஒருவருடைய அறையில் வைக்கப்பட்டிருந்த தாதியருடைய பணம் மற்றும் வைத்தியசாலையின் பணம் என்பன இவ்வாறு களவாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த வட்டுக்கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரி சமன் குணதிலக
மற்றும் வட்டுக்கோட்டை பொலிஸ் உத்தியோகத்தர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டதுடன்,
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
வீட்டைவிட்டு வெளியே போக சொன்ன பார்வதி, கண்ணீர்விட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam