யாழில் இளைஞர் - யுவதிகளை இலக்கு வைத்து பல கோடி ரூபாய் மோசடி
யாழ்பாணத்தில் இளைஞர், யுவதிகளை ஏமாற்றி கோடிக்கணக்கான பணத்தை பெற்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி, சுமார் ஆறு கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய கிழக்கு பல்கலைக்கழக அலுவலர் ஒருவர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோடிக்கணக்கான பணம்
குறித்த குற்றச்சாட்டில் ஏற்கனவே பெண்ணொருவர் கைது செய்யப்பட்டிருந்தார். அவரிடம் மேற்கொண்ட விசாரணைக்கு அமைய மற்றைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண்ணினால் கோடிக்கணக்கான பணம், பல்கலைக்கழக அலுவலரின் வங்கி கணக்கில் வைப்பிலிட்டுள்ளமையும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பான விரிவான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 7 மணி நேரம் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri
