வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பண வரவில் மிகப்பெரிய சரிவு
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடமிருந்து பெறப்படும் பணம் 50% குறைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
50 வீதத்தால் குறைந்த பண வரவு
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை, வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து பெறப்பட்ட வெளிநாட்டுப் பணம் 1,889.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.
மேலும், ஜூலை மாதத்தில் பெறப்பட்ட வெளிநாட்டுப் பணம் 279.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
இதன்படி, கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், இந்த நாட்டிற்கு வெளிநாட்டுப் பணம் அனுப்பப்படும் தொகை 50% குறைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.