ரஷ்யாவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய பேருந்து விபத்து
ரஷ்யாவில்(Russia) பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று பாலத்தில் இருந்து ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்த சம்பவமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் - செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பிராந்தியத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
மொய்கா ஆற்றின் மேம்பாலத்தில் பேருந்து பயணித்துக்கொண்டிருந்த போது அடங கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மூன்று பேர் உயிரிழப்பு
விபத்தின் போது பேருந்தில், 20 பேர் பயணித்துள்ளனர் எனவும், மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் 6 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பேருந்து விபத்துக்குள்ளான காணொளியானது இணையத்தில் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
காணொளியை காண இங்கே கிளிக் செய்யவும் - காணொளி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
you may like this

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 41 நிமிடங்கள் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
