விடுதலை புலிகளுக்கு எதிரான அநீதிகளுக்கு Truth commission-ஆல் சட்டமூலம்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் உண்மை ஆணைக்குழுவுக்கான (Truth commission) சட்டமூலம் ஒன்று கொண்டுவரப்படவுள்ளது.
இந்த ஆணைக்குழுவால் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினர் எதிராக பிரிவினைவாத யுத்தத்தில் இராணுவத்தால் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு தண்டனை வழங்குவதற்காகவென தோன்றுகிறது என ஊடவியலாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
எங்கள் சுதந்திரம்
இணையத்தள நிகழ்ச்சியில் நடந்த அரசியல் கலந்துரையாடல் நிகழ்விலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையில் அரசியல்,சமூக,பொருளாதாரம்,கலாசாரம் ஆகியவற்றுக்கு அழுத்தம் கொடுப்பதே போராட்டமாகும்.
இவ்வாறான போராட்டங்களின் உண்மைத்தன்மை கண்டுபிடிக்கப்பட வேண்டும்.
அதற்கு Truth commission ஒன்று தேவைத்தான்.
தற்போதைய அரசாங்கம்
இலங்கையில் 1815 கண்டி இராச்சியம் கைவிடப்பட்டு எங்கள் சுதந்திரம் பறிக்கப்பட்ட சம்பவம் மேலும் 1818 பெரும் கிளர்ச்சி,1971 மக்கள் விடுதலை முன்னணி கிளர்ச்சி அத்தோடு முப்பது வருடங்கள் நடந்த பிரிவினைவாத யுத்தம் போன்றன எமது நாட்டில் பாரிய மாற்றங்களை உண்டாக்கியது.
அதே போல் 2022 ஆம் ஆண்டு அரகலய போட்டத்தின் பல உண்மை தகவல்கள் மறைந்திருக்கிறது அல்லது மறைக்கப்பட்டுள்ளது.
சில தகவல்கள் வெளிவரலாம்,சில தகவல் வெளியிடப்படாமலும் இருக்கலாம். ஆனால் அவை வெளிகொண்டுவரப்பட வேண்டும்.
தற்போதைய அரசாங்கம் மற்றும் கடந்த அரசாங்கம் போன்றன இந்த அரகலய போராட்டத்தில் உருவாக்கப்பட்ட அதனால் இதன் உண்மைகள் வெளியில் வருமா என்பது சந்தேகமே என குறிப்பிட்டுள்ளார்.





கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam

Ethirneechal: அன்பு வலையில் வீழ்ந்த தர்ஷன்... சிறையிலிருந்து வெளிவந்த ஞானம்! பரபரப்பான ப்ரொமோ Manithan
