திடீரென ரத்துச் செய்யப்பட்ட மோடியின் இலங்கை பயணம்!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த மாத இறுதியில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவிருந்த நிலையில், இறுதி நேரத்தில் அந்த பயணம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இது சம்பந்தமான எந்த காரணமும் இந்திய தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை என அறியவருகிறது.
இந்திய பிரதமர் மோடி யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வரவும், அதன் பின்னர் யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தை திறந்து வைக்கவும் அதன் பின்னர் பிம்ஸ்டெக் மாநாட்டில் உரையாற்றவும் திட்டமிடப்பட்டிருந்தது.
அத்துடன் பலாலி சர்வதேச விமான நிலையத்தை இந்திய பிரதமர் மோடி மீண்டும் திறந்து வைப்பார் எனவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இவ்வாறான நிலையிலேயே அவரது இலங்கை பயணம் இரத்துச் செயயப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கைக்கான பயணத்தை இரத்துச் செய்து விட்டு இணையத்தள தொழிற்நுட்பம் ஊடாக பிம்ஸ்டெக் மாநாட்டில் உரையாற்ற மோடி தீர்மானித்தள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக தகவல் வெளியிடுவதை இந்திய உயர்ஸ்தானிகராலயம் தவிர்த்துக்கொண்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத சூழல் - 160 கிலோ எடையை 75 கிலோவாக குறைத்த மகன் News Lankasri
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
அறிவுக்கரசி வீடியோவாக காட்டிய விஷயம், கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
காயத்ரி பிரச்சனை முடிந்ததும் சோழனை தனியாக அழைத்துச்சென்று நிலா சொன்ன விஷயம்... அய்யனார் துணை சீரியல் அடுத்த கதைக்களம் Cineulagam