கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் நடமாடும் சேவை (VIDEO)
நீதி அமைச்சின் கீழுள்ள திணைக்களங்கள் மூலம் 27,28 ஆம் திகதிகளில் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெறும் நடமாடும் சேவையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் சேவையும் இடம்பெறவுள்ளது என காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் பிராந்திய இணைப்பாளர் க. செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சிக்கான பிராந்திய இணைப்பாளர் இன்று ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நீதி அமைச்சின் நடமாடும் சேவையில் இரண்டு பிரிவாக காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலக சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், வடமாகாணம் தழுவிய ரீதியில் நீதியமைச்சினால் முன்னெடுக்கப்படும் நடமாடும் சேவையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் மக்களுக்கு இரண்டு விதமான சேவையை முன்னெடுக்கவுள்ளது.
வடமாகாணத்தில் ஐந்து மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் நடமாடும் சேவையை மக்கள் தவறாது பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
27 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி காணாமல்போன ஆட்களின் மாவட்ட அலுவலகங்களில் அலுவலகத்தின் தலைவர் தலைமையில் ஐந்து மாவட்டங்களில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகங்களில் விசாரணை கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.
வடமாகாணத்தில் 400 பேர் வரை விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளதாகவும் அனைவரும் தவறாது கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.