தொலைப்பேசி விற்பனை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
தொலைபேசி உள்ளிட்ட தொலைத்தொடர்பு உபகரணங்களை விற்பனை செய்யும் 99 சதவீத இடங்கள் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் இருந்து வர்த்தக உரிமம் பெறவில்லை என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,தொலைபேசி உள்ளிட்ட தொலைத்தொடர்பு உபகரணங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்யும் போது தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் இருந்து வர்த்தக உரிமம் பெற வேண்டும்.
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

வர்த்தக அனுமதிப்பத்திரம் இன்றி யாராவது தொலைத்தொடர்பு உபகரணங்களை விற்பனை செய்தால், அது தொடர்பில் விசாரணை நடத்துவது தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பொறுப்பாகும்.
தொலைத்தொடர்பு சட்டத்தை மீறி சாதனங்கள் விற்கப்பட்டால்,தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து பொலிஸார் மூலம் சோதனை நடத்த வேண்டும்.
ஆணையத்தின் விசாரணைக்குப் பிறகு உரிமம் இல்லாமல் தொலைத்தொடர்பு கருவிகளை விற்பனை செய்யும் இடங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த பட்டியல் தொடர்பான முறைப்பாடுகள் அந்தந்த பொலிஸ் நிலையத்தில் தாக்கல் செய்யப்படும்.”என தெரிவித்துள்ளார்.
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri