கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற வெளிநாட்டுப் பெண்ணுக்கு அதிர்ச்சி - சினிமா பாணியில் அதிகாரிகளின் அதிரடி
வெளிநாடு செல்லத் தயாரான பெண்ணின் பேருந்தில் தொலைந்து போன, மதிப்புமிக்க ஆவணங்கள் அடங்கிய பொதியை, தென் மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபையின் அதிகாரிகள் கண்டுபிடித்து கொடுத்துள்ளனர்.
33 வயதான அர்ஜென்டினாவைச் சேர்ந்த பெண் ஒருவர், சுற்றுலாவுக்காக இலங்கைக்கு வந்துள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு, தனது தாய்நாட்டிற்கு திரும்புவதற்கான விமானப் பயணத்திற்கு ஒரு திகதியையும் நேரத்தையும் திட்டமிட்டிருந்தார்.
பயண பொதி
சமீபத்தில், அந்த இளம் பெண் விமான நிலையத்திற்குச் செல்வதற்காக காலி - மாத்தறை பேருந்தில் மாத்தறை நகரத்திற்குப் பயணம் செய்துகொண்டிருந்தபோது, பேருந்தில் அவரது பயண பொதி காணாமல் போயுள்ளது.

இதனைத் தொடர்ந்து, பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு இந்த விடயம் குறித்துத் தெரிவிக்கப்பட்டது.
அப்போதைய நிலையில், தனது பணியை முடித்துவிட்டு வீட்டில் இருந்த தென் மாகாண போக்குவரத்து அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் மகேஷ் தர்ஷன ஜெயசிங்க உடனடியாகக் கவனம் செலுத்தியுள்ளார்.
எனினும், எந்தப் பேருந்தில் பொதி தொலைந்தது என்பது குறித்த தகவல் இல்லாததால், பல பேருந்துகள் மீது கவனம் செலுத்தப்பட்டது.
சுற்றுலா பயணி
இந்த நிலையில் இதற்கிடையில், அந்த வெளிநாட்டுப் பெண் வழங்கிய தகவலின் அடிப்படையில், வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை அதிகாரிகள் உரிய பேருந்தைக் கண்டுபிடித்தனர்.

அதற்கமைய, அந்தப் பேருந்தைத் தொடர்பு கொண்டு பை கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அந்தப் பை உடனடியாக மாத்தறை பொலிஸாரிடம் கொண்டு வரப்பட்டு வெளிநாட்டு பெண்ணிடம் ஒப்படைகப்பட்டுள்ளது.
மேலும், அவர் வெளிநாடு செல்லவிருந்த நேரம் நெருங்கிக் கொண்டிருந்ததால், அவரை விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்ல பேருந்து இல்லாத நிலையில், போக்குவரத்து அதிகாரசபை அதிகாரிகள், அவர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் செல்வதற்கான தேவையான வசதிகளை செய்து கொடுத்துள்ளனர்.
அதற்கமைய, போக்குவரத்து அதிகாரசபை அதிகாரிகள், மாத்தறை பொலிஸ் மற்றும் மிரிஸ்ஸா சுற்றுலா பொலிஸ் ஆகியோரின் அர்ப்பணிப்பு காரணமாக, அந்த வெளிநாட்டுப் பெண் சரியான நேரத்தில் வெளிநாடு செல்ல முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரஜினி கமல் இணையும் படம்.. ஓடிடி வியாபாரம் இத்தனை கோடி தானா? அதிர்ச்சியில் தயாரிப்பு நிறுவனம் Cineulagam