ஆணைக்குழுக்கள் ஐ.நாவுக்கு கணக்கு காட்ட இனவழிப்பு அரசின் மற்றுமொரு திட்டம்!: ஈழத்தமிழர் உறவினர் அமைப்பு கண்டனம் (Photos)

United Nations Missing Persons Sri Lankan Tamils Sri Lanka OHCHR
By Jenitha Oct 11, 2022 07:03 PM GMT
Report

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்களை சந்திக்கும் திட்டம் ஒன்றுடன் இனவழிப்பு அரசின் ஆணைக்குழுக்கள் மட்டக்களப்பிற்கு செல்லவிருப்பதன் நோக்கம் சா்வதேச சமூகத்திற்கு மீண்டும் ஒருமுறை கணக்கு காட்டி ஏமாற்றுவதற்கான மற்றொரு முயற்சி என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழத்தமிழரின் உறவினர் அமைப்பு தெரிவித்துள்ளது. 

இவ்விடயம் தொடர்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழத்தமிழரின் உறவினர் அமைப்பால் இன்றைய தினம் (11.10.2022) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த செய்தி குறிப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். 

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது, 

“வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்களை சந்திக்கும் திட்டம் ஒன்றுடன் இனவழிப்பு அரசின் ஆணைக்குழுக்கள் எதிர்வரும் 21 ஆம் திகதி கிழக்கு மாகாணமான மட்டக்களப்பிற்கு செல்லவிருப்பதன் நோக்கம் சா்வதேச சமூகத்திற்கு மீண்டும் ஒருமுறை கணக்கு காட்டி ஏமாற்றுவதற்கான மற்றொரு முயற்சி. 

இதனை அம்பலப்படுத்தும் வகையில் ஈழத்தமிழ் மக்கள் இதனை முழுமையாகப் புறக்கணித்து இதில் எமக்கு நம்பிக்கை இல்லை என்பதை வெளிப்படுத்த வேண்டும்.

ஆணைக்குழுவின் வருகையை எமது உறவுகள் தீவிரமாக எதிர்ப்பதுடன், அவர்களுடைய வருகையை முழுமையாக பகிஷ்கரிப்பதன் மூலம் இனவழிப்பு அரசின் கபட நோக்கத்தை சா்வதேச சமூகத்துக்கு அம்பலப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுகின்றோம். 

இரண்டு இலட்சம் ரூபா

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் குடும்பங்கள் மீது கடுமையான பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்திவிட்டு தாங்கள் செய்த குற்றங்களை மூடி மறைக்க இரண்டு இலட்சம் ரூபாவை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இதை நாம் முற்று முழுதாக நிராகரிக்கின்றோம் எமக்கு வேணும் எமது உறவுகள்,  நாம் கோருவது இரண்டு இலட்சம் ரூபா அல்ல கொலையாழிகளும், கடத்தல் காரர்களும் சர்வதேச குற்றவியல் நீதி மன்றில் தொங்கவிடப்பட வேண்டும் அதற்குத்தான் சர்வதேச விசாரணை வேண்டும் என கோருகின்றோம்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 

ஆணைக்குழுக்கள் ஐ.நாவுக்கு கணக்கு காட்ட இனவழிப்பு அரசின் மற்றுமொரு திட்டம்!: ஈழத்தமிழர் உறவினர் அமைப்பு கண்டனம் (Photos) | Missing Persons United Nations Sri Lanka Ohchr

இலங்கை குறித்த தீர்மானம் ஐ.நாவில் கோர் குழுவால் நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையில், மிகவும் மோசமான தமிழின படுகொலை நடைபெற்றதற்கான ஆதாரங்களைச் சேகரிப்பதற்கான சா்வதேச பொறிமுறை ஒன்று அமைக்கப்படவிருக்கும் பின்னணியில், உள்நாட்டுப்பொறிமுறை மூலமாக பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது என காட்டிக்கொள்வதற்கான இலங்கை அரசின் ஒரு திட்டமிட்ட கபட நாடகம் தான் இது.

கடந்த கால அரசின் ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் தீர்மானங்களை மதிப்பீடு செய்து மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது என இது தொடர்பில் வெளியிடப்பட்ட செய்தி ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

2009ம் ஆண்டு இனவழிப்பின் ஊடாக யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த சிங்கள அரசாங்கம் மீது 13 வருடங்கள் கடந்துள்ள நிலைமையிலும் சர்வதேச சமூகத்தால் இதுவரை அவர்களுக்கான தண்டனைகள் சர்வதேச குற்றவியல் நீதி மன்றம் ஊடாக மேற்கொள்ளப்படவில்லை.

காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்களது கோரிக்கைகள்

ஆணைக்குழுக்கள் ஐ.நாவுக்கு கணக்கு காட்ட இனவழிப்பு அரசின் மற்றுமொரு திட்டம்!: ஈழத்தமிழர் உறவினர் அமைப்பு கண்டனம் (Photos) | Missing Persons United Nations Sri Lanka Ohchr

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்களது கோரிக்கைகள் சர்வதேச சமூகத்தால் தீா்க்கப்படவில்லை.

மாறாக பாதிக்கப்பட்ட மக்களின் சம்மதமின்றி இலங்கை அரசாலும்,சில வெளி சக்திகளாலும்,கூட்டமைப்பின் அனுசரணையுடன் கொலையாளிகளை நீதிபதிகளாக்கும் உள்நாட்டுப் பொறிமுறை கொண்டுவரப்பட்டது.

உள்நாட்டுப் பொறிமுறை ஊடாக பிரச்சினையைத் தீா்ப்பதற்கான சர்வதேச சமூகத்திற்கு வாக்குறுதிகளை வழங்கிய போதும் ஆக்கபூர்வமான செயற்பாடுகள் எதனையும் கடந்த காலங்களில் அரச அதிகாரத்திலிருந்த எந்த அரசாங்கமும் முன்னெடுக்கவில்லை.

இனிமேலும் அதற்கான செயற்பாடுகளை அவர்கள் முன்னெடுக்கப்போவதில்லை. மாறாக இனவழிப்பு,மற்றும் போர்க் குற்றங்களில் ஈடுபட்ட படையினரைப் உள்ளகப்பொறிமுறையூடாக பாதுகாப்பது என்பதுதான் இலங்கை அரசின் முன்னுரிமைக்குரிய பணியாக உள்ளது.

இந்த நிலையில் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் (International Criminal Court, பிரெஞ்சு: Cour Pénale Internationale) உலகில் இனப்படுகொலை, மனிதருக்கு எதிரான குற்றங்கள், போர் குற்றங்கள் செய்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க 2002இல் உருவாக்கப்பட்டது.

இந்த நீதிமன்றம் நெதர்லாந்தின் டென் ஹாக் நகரில் அமைந்துள்ளது. எனவே ஈழத்தமிழர் ஆகிய நாம் பரந்துபட்ட போராட்ட வெளிகளை உருவாக்கி சர்வதேச நீதி கோர அனைவரும் அணிதிரள வேண்டும்.”என அதில் குறிப்பிட்டுள்ளனர்.

May you like this Video


GalleryGalleryGallery
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இறக்குவானை, கந்தர்மடம், யாழ்ப்பாணம்

07 Apr, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Aulnay-sous-Bois, France

01 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், கண்டி

28 Apr, 2023
மரண அறிவித்தல்

நல்லூர், London, United Kingdom

30 Apr, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, வண்ணாங்குளம்

04 May, 2010
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, சொலோதென், Switzerland

03 May, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

02 May, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு

30 Apr, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, சூரிச், Switzerland

01 May, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், Ammerzoden, Netherlands

27 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fjellhamar, Norway

01 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Brampton, Canada

02 Apr, 2025
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, கிளிநொச்சி, அரியாலை, Toronto, Canada

26 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுவில், Bussy-Saint-Georges, France

25 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இலங்கை, கொழும்பு, Geneva, Switzerland

04 May, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

19 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, New Malden, United Kingdom

29 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US