யாழில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் முன்னெடுத்த போராட்டம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி யாழில் (Jaffna) போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டமானது, நேற்று (30) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோரிக்கை முன்வைப்பு
நீதி கோரி வடக்கு மாகாணத்தின் மாவட்டங்கள் தோறும் மாதாந்தம் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் ஒரு அங்கமாகவே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - முனியப்பர் ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டமானது,ஊர்வலமாக யாழ். பிரதான வீதி மற்றும் காங்கேசன்துறை வீதியூடாக சென்று யாழ். மத்திய பேருந்து நிலையத்தை அடைந்தது.
மேலும், யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் ஒன்று கூடி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நிலைகுறித்து சர்வதேசமே தீர்வை வழங்க வேண்டும் போன்ற சுலோகங்களுடன் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பிரபலம், அவரால் ஏற்படும் பரபரப்பு... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

சூப்பர் சிங்கர் போட்டியாளருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் ஆண்டனி... சந்தோஷத்தில் போட்டியாளர், வீடியோ Cineulagam
