கிளிநொச்சியில் காணாமல் போனவர் மட்டக்களப்பில் மீட்பு (photos)
கிளிநொச்சியில் காணமல் போயிருந்த நபர் மட்டக்களப்பில் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனகாம்பிகை குளம் பகுதியைச் சேர்ந்த உதயராஜ் அம்சவர்தன் என்பவர் கடந்த 16 ஆம் திகதி காணாமல் போனதாக அவரது பெற்றோரால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
முறைப்பாடு
கிளிநொச்சியில் அமைந்துள்ள தொழிற்பயிற்சி நிலையம் ஒன்றிற்கு சென்றிருந்த நிலையில் காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது.
மீட்பு
இந்நிலையில் இளைஞன் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில் இருப்பதாக அப்பகுதி இராணுவத்தினரால் அடையாளம் காணப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.