களுத்துறையில் காணாமல்போயுள்ள 9 வயது சிறுமி! பொது மக்களிடம் உதவி கோரும் பொலிஸார்
களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகம, அட்டுளுகமை பிரதேசத்தைச் சேர்ந்த ஒன்பது வயதுச் சிறுமியொருவர் இன்று காணாமல்போயுள்ளார்.
அட்டுளுகம பிரதேச பாடசாலையொன்றில் நான்காம் தரத்தில் கல்வி கற்கும் முஹம்மது அக்ரம் பாத்திமா ஆயிஷா என்ற சிறுமியே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.
வீட்டுக்கு சற்று தூரத்தில் இருந்த கோழி இறைச்சிக் கடைக்கு இன்று காலை பத்து மணியளவில் சென்றவர் அதன் பின் வீடு திரும்பவில்லை என்று சிறுமியின் பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சிறுமியை தேடிப்பிடிக்க பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளதுடன்,சிறுமி தொடர்பான தகவல்கள் ஏதேனும் அறிந்தவர்கள் 0777075223 இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என்றும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இதேவேளை, சிறுமி கடையை விட்டு வெளியேறுவது அருகில் உள்ள சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளதுடன்,சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
