உக்ரைன் தலைநகரில் பரபரப்பான சாலையில் விழுந்த ஏவுகணை! வெளியான அதிர்ச்சியளிக்கும் காட்சிகள்
உக்ரைன் தலைநகர் கீவ்வில், பரபரப்பான சாலை ஒன்றில், ஏவுகணை ஒன்று வந்து விழுவதைக் காட்டும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
கார் ஒன்றின் டேஷ்கேம் கமராவில் பதிவாகியுள்ள அந்த காட்சியில், 11.22 மணியளவில், வானிலிருந்து ஏவுகணை ஒன்று சாலையில் வந்து விழுவதைக் காணலாம்.
மயிரிழையில் தப்பிய கார்கள்
அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த கார்கள், அந்த ஏவுகணை தங்கள் மீது விழுவதிலிருந்து மயிரிழையில் தப்பியுள்ளன.
அத்துடன், அந்த ஏவுகணை வெடிக்கவும் இல்லை. ஆகவே, யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை.
அது உக்ரைனால் இடைமறிக்கப்பட்ட ஏவுகணையின் ஒரு பாகமாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
புடினின் உத்தரவு
திங்கட்கிழமையன்று, ரஷ்யா உக்ரைன் தலைநகர் கீவ் மீது தீவிர ஏவுகணை தாக்குதல் நிகழ்த்தியது. உக்ரைன் மீது 11 ஏவுகணைகளை ஏவுமாறு புடின் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்த தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுகிறது.
இதேவேளை அந்த தாக்குதலில் வீசப்பட்ட 11 ஏவுகணைகளையும் தாங்கள் இடைமறித்துவிட்டதாக உக்ரைன் இராணுவம் கூறியிருந்தது.
இந்நிலையில், ரஷ்ய ஏவுகணை ஒன்று சாலையில் வந்து விழும் காட்சி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு எபிசோடுக்கும் இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா விஜய் டிவி தொகுப்பாளர்கள்... யாருக்கு அதிகம், முழு விவரம் Cineulagam

விஜய் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாக போகும் பழைய ஹிட் சீரியல்கள்.. எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

பாகிஸ்தான், சீனாவிற்கு கெட்ட செய்தி... இந்திய ஆயுதப் படை சொந்தமாக்கவிருக்கும் ஆபத்தான ட்ரோன் News Lankasri

Falcon 2000 ஜெட் விமானங்களை இந்தியாவில் தயாரிக்கும் அனில் அம்பானி., பிரெஞ்சு நிறுவனத்துடன் கூட்டணி News Lankasri
