72 ஆவது உலக அழகியாக மகுடம் சூட்டப்பட்ட தாய்லாந்து அழகி
72ஆவது உலக அழகியாக தாய்லாந்தைச் சேர்ந்த ஓபல் சுச்சாட்டா சுவாங் ஸ்ரீ மகுடம் சூட்டப்பட்டார்.
இந்தியாவின் தெலுங்கானாவில் நேற்று இரவு நடைபெற்ற இறுதிப்போட்டியின்போது, அவர் உலக அழகியாக மகுடம் சூட்டப்பட்டார்.
எத்தியோப்பியாவை சேர்ந்த ஹசேட் டெரேஜே அட்மாசு இரண்டாவது இடத்தை பிடித்தார்.
உலக அழகி
தெலுங்கானாவில் கடந்த ஒரு மாத காலமாக இது தொடர்பான திறன்காண் போட்டிகள் இடம்பெற்று வந்தன.
இதில், உலகம் முழுவதிலுமிருந்து 108 போட்டியாளர்கள் அதிவேக கலாசார, சவால்கள் மற்றும் நோக்கம் சார்ந்த முயற்சிகளில் பங்கேற்றனர்.
இலங்கையின் அனுதி குணசேகரவு இந்தப்போட்டியில் பங்கேற்றார். அவர், பல்ஊடகம் மற்றும் நேரடிப் போட்டிகளில் வலுவான நிலையில் இருந்தபோதும், ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்காவிலிருந்து தெரிவான காலிறுதிக்கான 40 பேரில் அவர் தெரிவாகவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
