மிரிஹான பேருந்து எரிப்பு சந்தேகநபர் கைது
மிரிஹான பகுதியில் எரியூட்டப்பட்ட பேருந்து தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மிரிஹானவில் ஜனாதிபதியின் தனிப்பட்ட வாசஸ்தலத்திற்கு அருகில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது இராணுவ பேருந்துக்கு தீ வைத்த சந்தேகத்தின் பேரில் 42 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களை கைது செய்ய உதவுமாறு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடி சந்தேகநபர்களின் புகைப்படங்களை வெளியிட்டிருந்தனர்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் தற்போது சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.