அமைச்சு பதவி கோரும் மொட்டு கட்சி எம்.பி - செய்திகளின் தொகுப்பு
தமக்கு அமைச்சுப் பதவி கிடைக்க வேண்டும் எனவும், தனக்கு அமைச்சுப் பதவி கிடைக்காததால் பாரிய அநீதி இழைக்கப்பட்டதாகவும் அனுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
விரைவில் அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என செய்திகள் வெளியாகி உள்ளதாகவும் எனவே தனக்கு அமைச்சு பதவி வழங்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலைநேர செய்திகளின் தொகுப்பு,