நாட்டின் அபிவிருத்தி திட்டங்களை மீள ஆரம்பிக்கும் நிதி அமைச்சகம்
ஆண்டின் நடுப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள கட்டுமானத் திட்டங்கள் உள்ளிட்ட திட்டங்களை நாட்டின் வளர்ச்சி நடவடிக்கைகளுக்கு திறம்பட பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அடுத்த ஆண்டு வரவு செலவுத் திட்டங்களைத் தயாரிப்பது குறித்த விவாதங்களின் போது விசேட கவனம் செலுத்தப்படும் என்றும் நிதி அமைச்சகம் கூறியுள்ளது.
அமைச்சகங்களுக்கு முன்மொழிவு
கடந்த காலங்களில் பல பெரிய அளவிலான கட்டுமானத் திட்டங்கள் தொடங்கப்பட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டதாகவும், கோடிக்கணக்கான ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்தக் கட்டிடங்களை நிறைவு செய்வது அரசாங்கத்திற்கு பெரும் சுமையாக மாறியுள்ளது என்றும் நிதி அமைச்சகம் கூறுகிறது.

சம்பந்தப்பட்ட கட்டிடங்கள் மற்றும் திட்டங்களை திறம்பட பயன்படுத்த முடியுமா என்பது குறித்து, அவை செயல்படுத்தப்படும் அமைச்சகங்களுக்கு முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், பின்னர் அந்த முன்மொழிவுகள் ஆழமாக ஆய்வு செய்யப்பட்டு, கைவிடப்பட்ட கட்டிடங்களின் கட்டுமானத்தை முடித்து உற்பத்தி நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்படுவதாகவும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்.. படம் எப்படி இருக்கு? Cineulagam
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri