பட்டதாரிகள் அல்லாத ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவித்தல்
பயிற்றப்படாத ஆசிரியர்களாக பாடசாலைகளில் பணியாற்றி வரும் பட்டதாரிகள் அல்லாத ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சு விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
பயிற்சி பெற்ற ஆசிரியர்களாக தகுதி பெற விரும்பும், அரசாங்கப் பாடசாலைகளின் பட்டதாரிகள் அல்லாத சகல ஆசிரியர்களும் மே மாதம் நடைபெறும் அரசாங்க ஆசிரியர் கல்லூரி இறுதித் தேர்வு - 2025 பரீட்சையை எழுதுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பரீட்சை எழுத விரும்பும் அரசாங்கப் பாடசாலை ஆசிரியர்கள் ஜனவரி 9 முதல் 24 வரை இணையத்தளம் வழியாக விண்ணப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் சுற்றறிக்கை ஒன்றின் ஊடாக அறிவுறுத்தியுள்ளது.
மேலதிக விபரங்கள்
மேலும், பரீட்சை தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவங்களை பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான doenets.lk அல்லது onlineexams.govt.lk/eic இல் பெறலாம்.

இதன்படி, விண்ணப்பங்களை இந்த இணையத்தளங்கள் வழியாக பரீட்சைத் திணைக்களத்துக்கு உரிய திகதிக்கு அனுப்ப வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri