நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடி தொடர்பில் அமைச்சர் விடுத்துள்ள பணிப்பு: செய்திகளின் தொகுப்பு(Videos)
மின் நெருக்கடியைச் சமாளிக்க, பகல் நேரத்தில் ஒளிரும் மின் விளக்குகளின் பயன்பாட்டை 50% குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர அதிகாரிகளுக்கும் அதன் அனைத்து நிறுவனங்களுக்கும் பணித்துள்ளார்.
அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
எதிர்வரும் காலங்களில் நாட்டில் மின்சார நெருக்கடி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதால், மின்சாரம் விரயமாவதைத் தடுக்க அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களும் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்றார்.
இது தொடர்பான விரிவான தகல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,