அரசியல் கைதிகளை துன்புறுத்திய அமைச்சர் மட்டக்களப்பிற்கு விஜயம்! ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு
அண்மையில் தமிழ் அரசியல் கைதிகளைத் துன்புறுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட இராஜாங்க அமைச்சர் ரொஹான் ரத்வத்த (Rogan Ratwatte) இன்று மட்டக்களப்பிற்கு விஜயம் செய்த நிலையில் குறித்த நிகழ்வுக்கு ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அரசியல் கைதிகளைத் துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கட்சி உயர் மட்டத்தில் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் இராஜாங்க அமைச்சர் ரொகான் ரத்வத்தவை பதவி விலக்க வேண்டும் என்ற அழுத்தம் உருவாகி உள்ளது.
இந்நிலையில் குறித்த அமைச்சரை மட்டக்களப்பு மாவட்ட பொதுஜன பெரமுன அமைப்பாளர் சந்திரகுமார் அழைத்து ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுக்காது இரகசியமான முறையில் கூட்டம் நடத்தியுள்ளமை தமிழ் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிப்பதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri