இலங்கை வீரர்களை வாழ்த்த ஜப்பான் பறந்து சென்ற அமைச்சர் நாமல்
ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெறும் 2020 ஆம் ஆண்டுக்கான ஒலிக்பிக் போட்டிகளில் ஆரம்ப நிகழ்வுகளில் கலந்துக்கொள்வதற்காக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச ஜப்பான் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துக்கொள்ளும் இலங்கை வீர, வீராங்களை ஊக்கப்படுத்தவும், சர்வதேச ஒலிம்பிக் குழுவின் அதிகாரிகளை சந்திக்கவும் ஜப்பானிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவும் எண்ணியுள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெறவிருந்த சர்வதேச ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாக இந்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது.