அமைச்சு பதவி கிடைக்காத காழ்ப்புணர்ச்சியில் விஜயதாச ராஜபக்ச இவ்வாறு செயற்படுகின்றாரா? – மஹிந்தானந்த அலுத்கமகே
அமைச்சுப் பதவி கிடைக்காத காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச கொழும்பு துறைமுகத்திட்டத்திற்கு எதிர்ப்பு வெளியிடுகின்றாரா என்ற சந்தேகம் எழுவதாக அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுக நகர் திட்டம் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்திருந்தால் அதனை ஆளும் கட்சி கூட்டத்தில் கேட்டிருக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
மாறாக ஊடக சந்திப்பு ஒன்றை நடாத்தி அதில் தெரியாத விடயங்களை கூறி மக்களை பீதியடையச் செய்வது நியாயமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, விஜயதாச ராஜபக்சவிற்கு துறைமுக நகர் குறித்து விளக்கியுள்ள போதிலும் அச்சுறுத்தல் விடுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விஜயதாச ராஜபக்ச குற்றம் சுமத்துவதனைப் போன்று ஜனாதிபதி கோபாவேசமாக அச்சுறுத்தல் விடுக்கவில்லை என மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.