அமைச்சர் ஜீவன் தொண்டமானை கைது செய்யுமாறு உத்தரவு
நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானை கைது செய்யுமாறு நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நுவரெலியா - பீட்ரூ தோட்ட தேயிலை தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பான வழக்கில் அமைச்சர் ஜீவன் உள்ளிட்ட தரப்பினர் முன்னிலையாகாத நிலையில் குறித்த கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜீவனுக்கு எதிரான வழக்கு
இதன்படி, அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட குழுவினரை கைது செய்து எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 26ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குறித்த தொழிற்சாலைக்குள் அத்துமீறி அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் உள் நுழைந்ததாக தெரிவித்து களனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்தினரால் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த முறைப்பாடு தொடர்பான வழக்கு இன்றைய தினம் நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது அமைச்சர் ஜீவன் உள்ளிட்ட குழுவினர் முன்னிலையாகவில்லை.
இந்தநிலையில், வழக்கு விசாரணைக்கு முன்னிலையாகாத அமைச்சர் ஜீவன் உள்ளிட்ட குழுவினரை கைது செய்து எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 26ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

டிஆர்பியில் முன்னேறி வரும் விஜய் டிவியின் புதிய சீரியல்.. கடந்த வாரத்திற்கான டாப் 5 சீரியல் Cineulagam

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri

RCB-க்கு எதிராக விளையாட வருமாறு தினமும் 150 அழைப்பு வருகிறது - அவுஸ்திரேலியா வீரர் பென் கட்டிங் News Lankasri

தர்பூசணி சாப்பிடும் இ்ந்த பெண்ணின் படத்தில் இருக்கும் 4 வித்தியாசங்களை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

sambar podi: ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி நாவூறும் சுவையில் செய்வது எப்படி? காரசாரமான ரெசிபி Manithan
