ஒரு இலக்கத்தின் ஊடாக பல வாகனங்களை பதிவு செய்யலாம்: எரிசக்தி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
அதிகளவான வாகனங்களைக் கொண்ட வணிகங்கள் தமது வணிகப் பதிவு எண்களுடன் (BRN) தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்துக்கான பதிவை பெறமுடியும் என இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிறுவனம் (ICTA) தெரிவித்துள்ளது.
இதேவேளை, அரச நிறுவனங்கள் மற்றும் வணிகங்கள் வணிகப்பதிவு எண்களின் கீழ், ஒன்று அல்லது பல தொலைப்பேசி எண்கள் மூலம் பதிவு செய்யலாம் என்று அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இதனை பதிவிட்டுள்ளார்.
Fuel Pass Update -
— Kanchana Wijesekera (@kanchana_wij) August 14, 2022
Government Institutes, Organizations & Businesses can Now register Multiple vehicles with One mobile number or multiple mobile numbers under One Business Registration Number.
Govt institutes will be given guidelines on BRNs assigned to them.
More info 👇🏾 https://t.co/uRMrVdO8Xk
பதிவு செய்யும் முறை
அதற்கமைய, http://fuelpass.gov.lk என்ற இணையத்தள முகவரிக்கு பிரவேசித்து, வணிக பதிவு எண் (BRN) வகையின் கீழ், முதலாவது வாகனத்தைப் பதிவு செய்யலாம்.
அதன்பின் பதிவு செய்யப்பட்ட தொலைப்பேசி எண்ணின் சுயவிவரத்தில் உள்நுழைந்து, ‘Add’ என்பதை அழுத்துவதன் மூலம் தமது வணிகத்துக்குரிய மேலும் பல வாகனங்களை சேர்க்க முடியுமென இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிறுவனம் (ICTA) தெரிவித்துள்ளது.
மேலும், அரச நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வணிகப் பதிவு எண் தொடர்பான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விநியோகத்தில் இன்று நள்ளிரவு முதல் கொண்டுவரப்படும் புதிய மாற்றம் |
எரிசக்தி அமைச்சின் அறிவிப்பு
இதேவேளை,தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம்(QR) முறையின்படி வழங்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு இன்று நள்ளிரவு முதல் புதுப்பிக்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த வார தரவுகளை ஆராய்ந்த பின்னர், அடுத்த வாரத்திற்கான எரிபொருள் ஒதுக்கீட்டில் செய்யப்படவுள்ள மாற்றங்கள் இன்று அறிவிக்கப்படும்.
குறைந்த வரிசைகள் இம்மாதம் முதலாம் திகதி முதல் QR முறைப்படி எரிபொருள் ஒதுக்கீட்டின் கீழ் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், எரிபொருள் ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டதையடுத்து, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காணப்பட்ட வரிசை குறைந்துள்ளதாகவும் எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.