மாதம் 100 மில்லியன் டொலர்களை கோரும் அமைச்சர்
நாட்டுக்கு தேவையான அத்தியவசிய பொருட்களை இறக்குமதி செய்ய தனது அமைச்சுக்கு ஒரு மாதத்திற்கு 100 மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, (Bandula Gunawardana) அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்.
அரிசி, சீனி, மிளகாய், கிழங்கு, வெங்காயம், பருப்பு போன்ற அத்தியவசிய பொருட்களை இறக்குமதி செய்ய இந்த பணம் தேவை எனவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டின் அரச திறைசேரியில் போதுமான டொலர்கள் கையிருப்பில் இல்லாத காரணத்தினால், அரசாங்கம் நட்பு நாடுகளிடம் டொலர்களை கடனாக பெற தீர்மானித்துள்ளது.
இதனடிப்படையில் சீனா, ஜப்பான், ரஷ்யா போன்ற நாடுகளிலும் கடனை பெறுவது குறித்து அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அத்துடன் இந்தியாவுக்கு இலங்கைக்கு ஆயிரத்து 400 மில்லியன் டொலர்களை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 21 மணி நேரம் முன்
வெளிவரப்போகும் குணசேகரன் ஈஸ்வரியை தாக்கிய வீடியோ, எப்படி தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
தமிழ் புத்தாண்டு சிறப்பு திரைப்படம்.. கலைஞர் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் முன்னணி ஹீரோவின் படம் Cineulagam
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri