தொடரும் பால் மா நெருக்கடி!
நாட்டில் ஏற்பட்டிருக்கும் இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான தட்டுப்பாடு அடுத்த மாதம் நடுப்பகுதி வரை தொடரும் சாத்தியம் இருக்கின்றது என பால்மா இறக்குமதியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
பால்மா இறக்குமதி செய்வதற்கு தேவையான வங்கி நாணய கடிதம் திறப்பதற்கு டொலர் பற்றாக்குறையாக இருப்பதே இதற்கு காரணம் எனவும் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் இலங்கையில் மாதம் ஒன்றுக்கு 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் டொன் பால்மா தேவையாகின்றது. அதற்காக 30 மில்லியன் டொலர் தேவையாகின்றது.
சாதாரணமாக வாரத்துக்கு ஒருமுறை பால்மா அடங்கிய கப்பல் ஒன்று நாட்டுக்கு வருகின்றது. தற்போதைய நிலைமையில் பால்மா அடங்கிய கப்பல் ஒன்று வர இருப்பது இந்த மாதம் இறுதி இரண்டு வாரங்களுக்குள்ளாகும்.
அவ்வாறு பால்மா அடங்கி கப்பல் வந்தாலும் தற்போது பால்மாவுக்கு இருக்கும் பற்றாக்குறை தீரப்போவதில்லை எனவும் சங்கத்தின் பேச்சாளர் குறிப்பிட்டார்.
ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள கருப்பு திரைப்படம்.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா Cineulagam
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri