புதுடெல்லியில் இந்திய வெளியுறவு செயலாளரை சந்தித்துள்ள மிலிந்த மொரகொட
இந்தியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லாவை இன்று, புதுடெல்லியில் உள்ள வெளியுறவு அமைச்சகத்தில் சந்தித்து பேசியுள்ளார்.
இந்த சந்திப்பு, புதிதாக வருகை தந்த இராஜதந்திர தூதுவர்கள், இந்திய வெளியுறவுச் செயலாளரை சந்திக்கும் நடைமுறைக்கு ஏற்ப இருந்தது.
இந்த கலந்துரையாடலின் போது, இருவரும் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த பல விஷயங்களைப் பற்றி விவாதித்துள்ளனர்.
உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்ட மொரகொட, நம்பிக்கையை வளர்ப்பதற்கான ஒரு வழிமுறையாக மக்களிடையே தொடர்புகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.