யாழ். முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்
யாழ். மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாடகை சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் கட்டண மீட்டர் பொருத்துதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்றையதினம்(30.06.2023) அரச அதிபர், முச்சக்கர வண்டி சங்கத்தினர், மற்றும் மாநகர சபை ஆணையாளர் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது குறித்த விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் யாழ் மாவட்ட முச்சக்கர வண்டிகள் சங்கத்தில் பதிவினை மேற்கொண்டு எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னதாக கட்டண மீட்டர்களை பொருத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
முச்சக்கர வண்டி சாரதிகள்

அதனைத் தொடர்ந்து எதிர்வரும் 16ஆம் 17 ஆம் மற்றும் 18 ஆம் திகதிகள் ஆகிய மூன்று நாட்களிலும் கட்டண மீட்டர்கள் பொருத்தப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கு பொலிஸாரினால் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே யாழ். மாவட்ட முச்சக்கர வண்டிகள் சங்கத்தில் பதிவினை மேற்கொண்டு கட்டண மீட்டர்களை பொருத்தி, பொலிஸாரின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பின்னரே சேவையில் ஈடுபட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திதியில் இருந்து குறித்த நடவடிக்கைகளை
பின்பற்றாத முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட முடியாது எனவும் முச்சக்கர வண்டிகளை வாடகைக்கு அமர்த்துவோர் பாதிப்பிற்குள்ளாகாது பணத்தினை
செலுத்துவதற்கும், முச்சக்கர வண்டி சாரதிகள் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான
கட்டணத்தினை அறவீடு செய்வதைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் குறித்த நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 5 மணி நேரம் முன்
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan