கோட்டாபயவின் கைதை நிறுத்தியவருக்கு எச்சரிக்கை! மேர்வின் சில்வா
துட்டகைமுனு பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வெண்டாமென ராஜபக்சர்களை நாம் கேட்டுக் கொள்வதாக முன்னாள் அமைச்சர் மேல்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
1994ஆம் ஆண்டு முதல் மஹிந்த ராஜபக்சவுடன், விஜயதாச ராஜபக்ச இணைந்து செயற்படுகின்றார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் கோட்டாபய ராஜபக்சவை கைது செய்ய நடவடிக்கை எடுத்த போது நீதியமைச்சராக அதனை தடுத்தது விஜயதாச ராஜபக்சவே.
இது சட்டவிரோதமான செயல் என அதனை தடுத்தது அவரே.
அவ்வாறான ஒருவருக்கு இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தகாத வார்த்தைப் பிரயோகத்தை பயன்படுத்தி எச்சரித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

ஜேவிபி மீண்டும் தன்னை அம்பலப்படுத்தி விட்டது 8 மணி நேரம் முன்

விஜய் டிவி மகாநதி சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... அட இதுவும் சூப்பர் தான், என்ன தெரியுமா? Cineulagam
