மேர்வின் சில்வா மீண்டும் விளக்கமறியலில்...!
முன்னாள் மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வாவை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று (17) அவர் மஹர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
போலி பத்திரங்கள்
கிரிபத்கொட பகுதியில் உள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான காணியை போலியான பத்திரங்களைப் பயன்படுத்தி தனியாருக்கு விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கடந்த 5 ஆம் திகதி இரவு குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா பத்தரமுல்லையில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக மேர்வின் சில்வாவைத் தவிர, மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri
